கெமிக்கல் நிறுவன வெடிவிபத்து பலி 13 ஆக உயர்வு

தானேயின் டோம்பிவிலி நகரத்தில் உள்ள அமுதன் கெமிக்கல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் ஏற்பட்ட வெடிவிபத்து மற்றும் அதையொட்டிய தீ விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தானேயின் டோம்பிவிலி நகரத்தில் உள்ள அமுதன் கெமிக்கல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலியானார்கள். அதன் பின்னர் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ராட்சத விளம்பர பலகை விழுந்த விபத்து மற்றும் உயிர்ப்பலிகளுக்கு பின்னர், டோம்பிவிலி விபத்து மாநிலத்தை உலுக்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி