மயிலாடுதுறை தொகுதியின் நாடாளுமன்ற வேட்பாளராக வழக்கறிஞர் சுதாவை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. ஒற்றுமை யாத்திரையின் முதல் பகுதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபெற்ற நிலையில், இவர் ராகுல் காந்தியுடன் நடந்த யாத்திரிகர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட இழுபறியில் இருந்த மயிலாடுதுறைக்கு பெண் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். இன்றுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைய உள்ள நிலையில், நேற்று கடைசி நேர கட்டத்தில் வேட்பாளர் அறிவிப்பு வெளியானது.
தமிழத்தில் 9 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
திருவள்ளூர் (தனி) - சசிகாந்த் செந்தில்
கிருஷ்ணகிரி - கோபிநாத்
கரூர் - ஜோதிமணி
கடலூர் - விஷ்ணு பிரசாத்
சிவகங்கை - கார்த்தி சிதம்பரம்
விருதுநகர் - மாணிக்கம் தாகூர்
கன்னியாகுமரி - விஜய் வசந்த்
திருநெல்வேலி - ராபர்ட் புரூஸ்
மயிலாடுதுறை - வழக்கறிஞர் சுதா