இலங்கைத் தமிழர் மறுவாழ்வு இல்லத்தில் வசிக்கும் மாணவிக்கு முதலமைச்சர் உதவி

புதுக்கோட்டை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு இல்லத்தில் வசிக்கும் மாணவி சு. ஷரினாகிறிஸ்ட்வுக்கு மருத்துவ அறிவியல் பட்டப்படிப்பு படித்திட தேவையான உதவிகளை செய்து கல்லூரி சேர்க்கை ஆணையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதற்கு, இந்த மாணவி முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கல்வியின் துணையால் கனவு மெய்ப்படட்டும் என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி