ஆந்திரா: துணை முதல்வராக பவன் கல்யாண் பொறுப்பேற்பு (Video)

ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பா.ஜ.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. 175 பேரவை தொகுதிகளில் 164 தொகுதிகளை அள்ளியது. இந்நிலையில் மாநிலத்தின் முதல்வராக சந்திரபாபு நாயுடு இன்று (ஜூன் 12) நான்காவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். அதே போல ஜனசேனா கட்சி தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். தேர்தல் வெற்றியை உறுதி செய்ததில் பவன் கல்யாணுக்கு பெரும் பங்கு உள்ளதால் அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி