வெடித்து சிதறிய போர் விமானம்.. உயிர் தப்பிய விமானி

79பார்த்தது
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சுகோய் போர் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இருந்து விமானி மற்றும் துணை விமானி பத்திரமாக உயிர் தப்பினர். பலத்த சத்தத்துடன் வயல்வெளியில் விமானம் விழுந்து நொறுங்கும் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர், சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி