பயங்கரவாத தாக்குதல் - 5 ராணுவ வீரர்கள் காயம்

65பார்த்தது
பயங்கரவாத தாக்குதல் - 5 ராணுவ வீரர்கள் காயம்
ஜம்மு காஷ்மீர் தோடா மாவட்டத்தில் உள்ள தற்காலிக ராணுவ முகாம் மீது இன்று (ஜுன் 12) பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 5 ராணுவ வீரர்கள் மற்றும் சிறப்பு போலீஸ் அதிகாரி ஒருவரும் காயமடைந்தனர். பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். காயம் அடைந்த ராணுவ வீரர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த தீவிரவாத தாக்குதலை தாங்கள் தான் நடத்தியதாக காஷ்மீர் டைகர்ஸ் என்ற பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. காஷ்மீரில் கடந்த மூன்று நாட்களில் மூன்று பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன.

தொடர்புடைய செய்தி