மொட்டை மாடியில் கஞ்சா வளர்த்த இளைஞர் கைது

85பார்த்தது
மொட்டை மாடியில் கஞ்சா வளர்த்த இளைஞர் கைது
திருப்பத்தூர் இடையம்பட்டியில் இளைஞர் ஒருவர் கஞ்சா போதையில் தனது மனைவியை அடித்துள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட மனைவி, தனது கணவர் வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா வளர்ப்பதாகவும், போதையில் அடித்து துன்புறுத்துவதாகவும் கூறி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் இளைஞரை கைது செய்து, வீட்டில் வளர்த்து வந்த கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அந்த இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி