உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இளம்பெண் ஒருவர் கடத்தப்பட்டு பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். சர்தார் நகர் கிராமத்தை சேர்ந்த லட்சுமி (22) என்ற இளம்பெண் தனது உறவினர் சகோதரி சப்னாவுடன் ஸ்கூட்டியில் ஷாப்பிங் சென்றுள்ளார். இந்நிலையில், திடீரென லட்சுமி காணாமல் போனார். லட்சுமி திரும்பி வராததால், குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். விரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையில், தொண்டை வெட்டப்பட்ட நிலையில் லட்சுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.