தில்லி கீதா காலனியில் புதன்கிழமை காலை ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஜானகி குமாரி (65) என்ற பெண் அன்றைய தினம் வழக்கம் போல் வீட்டின் முன்புறம் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது, முகேஷ் ரத்தோர் என்ற வாலிபர் காரை வேகமாக ஓட்டினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் ஜானகி மீது மோதியது. இதனால் ஜானகி காற்றில் பறந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விபத்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.