எதற்கெடுத்தாலும் வெள்ளை அறிக்கை கேட்பதா?

53பார்த்தது
சென்னை நேப்பியர் பாலம் அருகே உள்ள முகத்துவாரத்தில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரிடம், எதிர்க்கட்சித் தலைவர் மழை தடுப்பு பணிக்கு வெள்ளை அறிக்கை கேட்கிறாரே என்ற கேள்விக்கு, "பத்திரிக்கை செய்தியில் கருப்பு மையால் வரும் அறிக்கையே போதும். எதற்கெடுத்தாலும் வெள்ளை அறிக்கையா? கூவம் ஆற்றை திமுக சீரமைப்பு செய்து வருவது போன்று அதிமுக செய்ததா? என கேள்வி எழுப்பிய அவர், இதுபோன்று நூற்றுக்கும் மேற்பட்ட பணிகளை திமுக செய்துள்ளது" என தெரிவித்தார்.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி