பேரன் இறப்பை தாங்க முடியாத பாட்டி மரணம்

75பார்த்தது
பேரன் இறப்பை தாங்க முடியாத பாட்டி மரணம்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பலாப்பட்டு கிராமத்தில் உடல்நலக்குறைவு காரணமாக பேரன் இறந்த துக்கத்தில் பாட்டியும் உடன் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. 10ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன் ரிஷி (15), உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். ஆனால், சிகிச்சைப் பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். பேரன் ரிஷியின் உடலை பார்த்து கதறி அழுத பாட்டி தெய்வானை மயங்கி விழுந்த நிலையில் அவரும் உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி