சாதி கணக்கு எடுக்க திமுக-வுக்கு என்ன பயம்

363பார்த்தது
சாதி கணக்கு எடுக்க திமுக-வுக்கு என்ன பயம்
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த திமுக அரசுக்கு என்ன பயம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர்; மாநில அரசுக்கு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த அனைத்து உரிமையும் உள்ளது, சமூகநீதி என்றாலே சாதிவாரி கணக்கெடுப்புதான் அடித்தளம் என்றும் அதனை நடத்தாமல் கைகழுவி விடுவது சமூக அநீதி என்றும் கூறினார். தமிழகத்தில் கடைசியாக 1931ல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாகவும், தற்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் திமுகவுக்கு என்ன பயம்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி