வெடி விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

71பார்த்தது
வெடி விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். வெடிமருந்து கலவை செய்யும் போது பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ராஜ்குமார், மாரிச்சாமி, செல்வகுமார், மோகன் ஆகியோர் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.