சிவகாசி: குருணை மருந்து சாப்பிட்டு தொழிலாளி தற்கொலை...

85பார்த்தது
சிவகாசி அருகே குருணை மருந்து சாப்பிட்டு தொழிலாளி தற்கொலை.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே சேனையாபுரம் காலனியை சேர்ந்த வர் கணேசன் (40). இவர் காமராஜர் காலனியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். மது அருந்தும் பழக்கம் இருந்த கணேசன் வேலைக்கு சரியாக செல்லாமல் இருந்துள்ளார். சம்பவத்தன்று காலையில் வழக்கம்போல் வேலைக்கு சென்றவர் நீண்டநேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பவில்லை. அவரது மனைவி மணிசங்கரி, கணேசன் வேலை செய்யும்நிறுவனத்துக்கு சென்ற போது அங்கு குடி போதையில் இருந்த கணேசன் காலையில் வீட்டிற்கு வருவதாக தெரிவித்துள்ளார். காலையில் சென்று அழைத்த போது தான் குருணை மருந்தை மதுவுடன் கலந்து குடித்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணிசங்கரி, தனது கணவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி