சிவகாசி: விளையாட்டு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி..

50பார்த்தது
சிவகாசி - தனியார் கல்லூரி மாணவர்கள்பங்கேற்ற 240 கிலோ மீட்டர் விளையாட்டு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியிலிருந்து குற்றாலம் வரை சைக்கிளிலேயே சென்று விளையாட்டு குறித்த நகர்ப்புறம் மற்றும் கிராமப் பகுதி மக்களிடையே ஏற்படுத்தி விழிப்புணர்வு பேரணி. சிவகாசியில் இருந்து திருவில்லிபுத்தூர் செல்லும் சாலையிலுள்ள தனியார் கல்லூரி சார்பாக உடற்கல்வித்துறை மாணவர்கள் 250 பேர்கள் பங்கேற்றுள்ள சைக்கிள் விழிப்புணர்வு பேரணி ஊர்வலம் கல்லூரி வளாகத்தில் தொடங்கி மல்லி, திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், தளவாய்புரம், முகவூர், தேவதானம், வாசுதேவ நல்லூர், புளியங்குடி, கடையநல்லூர், தென்காசி ஆகிய ஊர்கள் வழியாக 120 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து குற்றாலத்தை சென்றடைகிறது. மேலும் சைக்கிள் ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவர்கள், வழியெல்லாம் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், விளையாட்டை மேம்படுத்துவது பற்றியும், அனைத்து தரப்பு மக்களிடையே துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி பின்பாக குற்றாலத்திலிருந்து கிளம்பி மீண்டும் 120 கிலோ மீட்டர் தூரத்தை சைக்கிளிலேயே கடந்து வருகிற 26 தேதி வெள்ளிக்கிழமை மாலை சிவகாசிக்கு கல்லூரி வளாகத்திற்கே வந்தடைகின்றனர்.

தொடர்புடைய செய்தி