சிவகாசி: காதல் கணவர் வெட்டிக் கொலை....

599பார்த்தது
சிவகாசியில் காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை மர்ம நபர்களால் வெட்டிக்கொலை.
3 பேர் தலைமறைவு.
விருதுநகர் மாவட்டம், ஶ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகரை சேர்ந்த மாரிமுத்து மகன் கார்த்திக்பாண்டி(26). இவர் சிவகாசியில் மெக்கானிக் வேலை செய்த போது, அதே பகுதியில் உள்ள கடையில் வேலை செய்த சிவகாசி வம்பிழுத்தான் முக்கு பகுதியை சேர்ந்த பொன்னையா மகள் நந்தினி(22) என்பவருடன் காதல் ஏற்பட்டது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். கடந்த 8 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து, அய்யம்பட்டியில் வீடு எடுத்து தனியாக வசித்து வந்தனர். ரிசர்வ் லயன் பகுதியிலுள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் நந்தினி வேலை செய்து வந்தார். இந்நிலையில் இரவு நந்தினியை அழைத்துச் செல்வதற்காக கார்த்திக்பாண்டி வந்துள்ளார். அப்போது பைக்கில் வந்த 3 பேர் கார்த்திக்பாண்டியை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர். இது குறித்து தகவலறிந்து வந்த திருத்தங்கல் போலீஸார் கார்த்திக்பாண்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் சுப்பையா ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர். தலைமறைவான மூன்று பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி