சாலை விபத்தில் உயிர் இழந்த குடும்பத்திற்க்கு நிதி உதவி..

55பார்த்தது
சிவகாசி சாலை விபத்தில் உயிரிழந்த ஊராட்சி மன்ற தலைவரின் குடும்பத்திற்கு நிதி உதவி.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி சாலை விபத்தில் உயிரிழந்த ஊராட்சி மன்ற தலைவரின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
சிவகாசி ஒன்றியம் செங்கமலநாச்சியார் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பசாமி, கிருஷ்ணபேரி ஊராட்சி மன்றத்தலைவர் வினோதியின் கணவர் அபிமண்ணன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31 ம் தேதி சென்னையில் நடைபெற்ற ஊராட்சி மன்றத்தலைவர்கள் உரிமை மீட்பு பேரணியில் கலந்து கொள்ள சென்ற போது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் உயிரிழந்தனர். ஊராட்சி மன்ற தலைவர் கருப்பசாமி குடும்பத்திற்கும், ஊராட்சி மன்ற தலைவர் வினோதியின் கணவர் அபிமண்ணன் குடும்பத்திற்கும் தமிழ்நாடு அனைத்து கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் நல சங்கத்தின் சார்பாக தலா ரூ. 4 லட்சம் நிதி திரட்டப்பட்டது. நிதியை சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து செங்கமமலநாச்சியார் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பசாமியின் மனைவி முத்துக்கண்ணுக்கு ரூ. 2லட்சம், கிருஷ்ணாபேரி ஊராட்சி மன்றத் தலைவர் வினோதினிக்கு ரூ. 2லட்சம் அனைத்து கிராம ஊராட்சி மன்றத்தலைவர்கள் நல சங்கதின் மாநிலத் தலைவர் முனியாண்டி வழங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் ஆரணி ராஜன், மாநில துணைத் தலைவரும் நாரணாபுரம் ஊராட்சி மன்ற தலைவருமான தேவராஜன், ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி நாராயணன் மற்றும் ஒன்றிய அலுவலர்கள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி