தமிழகத்தில் ரவுடிகள் மீதுகடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது MP

81பார்த்தது
சாத்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் MP மாணிக்கதாகூர் பங்கேற்பு.
விருதுநகர் மாவட்டம்,
சாத்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் நேற்று இரவு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் MP மாணிக்கதாகூர் பங்கேற்பு.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம்தாகூர் எம்பி, பாஜகவை சேர்ந்த மத்திய இணைஅமைச்சர் எல். முருகனை நெல்லை நாடாளுமன்ற எம்பி சந்தித்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த மாணிக்கம் தாகூர் நெல்லை காங்கிரஸ் எம். பி மத்திய இணை அமைச்சர் எல். முருகனை மரியாதை நிமித்தமாக தான் சந்தித்தார் எனவும் மேலும் மத்திய இணை அமைச்சர் எல். முருகனால் தமிழ்நாட்டுக்கு எந்த வித பயனும் ஏற்படப் போவதில்லை என விமர்சனம் செய்தார்.
மேலும் பாஜகவின் எல். முருகன் தமிழ்நாட்டுக்கு எதுவுமே செய்யாத ஒரு மத்திய அமைச்சர் என்றார். மேலும் பேசிய மாணிக்கம்தாகூர் எம்பி தமிழ்நாட்டிற்கு பிரதி நிதித்துவம் கொடுத்தாக கணக்கு காட்டுவதற்கு தான் எல். முருகன் மத்திய இணை அமைச்சராக இருக்கிறார் என விமர்சனம் செய்தார், மேலும் திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கிறது என காட்டுவதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார். மேலும் தமிழகத்தில் ரவுடிகள் மட்டும் ரவுடிசம் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை பொதுமக்கள் பாராட்டுகின்றனர் என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி