சாத்துார்: சட்டவிரோதமாக பட்டாசுகள் தயார் செய்தவர் கைது...

85பார்த்தது
சாத்துார் அருகே வீட்டில் வைத்து பட்டாசுகள் தயார் செய்தவர் கைது. சரவெடி பட்டாசுகள் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
சாத்துார் வட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள கீழக்கோதை நாச்சிபுரம் காலனி தெருவில் வசிப்பவர் கொடியரசன் இவர் தனது வீட்டின் அருகே தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசுகள் தயார் செய்து இருப்பு வைத்து இருப்பதாக காவல் நிலையத்திற்கு தகவல் வந்தன. மேற்படி தகவலின் பேரில் வெம்பக்கோட்டை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் செண்பகவேலன் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். ஆய்வில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயார் செய்து இருப்பு இருந்ததை பறிமுதல் செய்த போலீஸார் கொடியரசன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி