சாத்துார்: பட்டாசு ஆலை வெடி விபத்து. பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு

75பார்த்தது
பட்டாசு ஆலை வெடி விபத்து பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு.
சாத்துார் அருகே உள்ள குகன்பாறையில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பலியான நிலையில்- பலத்த காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த குருமூர்த்தி என்பவர் சிகிச்சை பலன் இல்லாமல் உயிர் இழப்பு.
விருதுநகர் மாவட்டம்,
சாத்தூர் அருகே உள்ள குகன்பாறையில் சிவகாசியை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான நாக்பூர் உரிமம் பெற்ற லட்சுமி பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. கடந்த 19 ஆம் தேதி தொழிலாளர்கள் வழக்கம் போல் பட்டாசு ரசாயன மூலப்பொருள் கலவை செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ரசாயன மூலப்பொருட்களில் ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பணி செய்து கொண்டிருந்த 3 அறைகள் தரைமட்டமானது. மேலும் பணியில் இருந்த குருமூர்த்தி பாண்டியன் 19 என்ற தொழிலாளி 90 சதவீத தீக்காயத்துடன் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலன் இல்லாமல் உயிர் இழந்தார். ஏற்கனவே கோவிந்தராஜ் 24, என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை இரண்டாக உயர்வு. இச்சம்பவம் குறித்து ஏழாயிரம் பண்ணை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி