இராஜபாளையம்: கொட்டி தீர்த்த மழை. சாலையில் வெள்ள பெருக்கு....

67பார்த்தது
இராஜபாளையம் கொட்டி தீர்த்த மழை. சாலையில் வெள்ள பெருக்கு.
விருதுநகர் மாவட்டம்,
இராஜபாளையம் மற்றும் சுற்று பகுதிகளில் காலை முதல் மேக மூடத்ததுடன் காணப்பட்ட நிலையில் மாலை நேரத்தில் குளிர்ந்த காற்று வீசிய சிறிது நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தன. மேலும் பலத்த மழையால் காந்தி சிலை மற்றும் மதுரை - தென்காசி ரோட்டில் மழை‍ நீர் தேங்கி ஓடுவதால் இருசக்கர வாகனத்தில் செல்லுபவர்கள் பெரும் அவதியடைந்தனர். மேலும் மழை தொடர்ந்து 30 நிமிடம் இடைவிடாமல் பெய்ததால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். பலத்த காற்று மற்றும் மழை காரணமாக பல இடங்களில் மரம் முறிவு மற்றும் மின் தடை ஏற்பட்டன. மேலும் மதுரை to செங்கோட்டை சாலையில் மழை நீருடன், கழிவு நீர் சென்று ஆங்காங்கே உள்ள ஹோட்டல் மற்றும் பெட்டி கடைகள், வீடுகளில் மழை நீர் புகுந்தன. மேலும் மழை நீர் புகுந்த இடங்களில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் தூய்மை பணி செய்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி