விருதுநகர்: குடும்ப பிரச்சினை.. மனைவி வெட்டி கொலை

55பார்த்தது
*விருதுநகரில் குடும்பப் பிரச்சினை காரணமாக கணவன் அறுவாமனனயால் மனைவியை வெட்டி கொலை செய்து விட்டு அவரும் தற்கொலை முயற்சி. *

விருதுநகர் மாவட்டம் வெள்ளூரைச் சேர்ந்தவர்கள் செல்வம் மற்றும் அவரது மனைவி செல்வி. இருவரும் பட்டாசு ஆலையில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் இவர்களுக்கு திருமணம் முடிந்து 15 வருடங்கள் ஆன நிலையில் இது சம்மந்தமாக அடிக்கடி இருவருக்குள்ளும் தகராறு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று இரவு வீட்டில் இருந்த பொழுது இது சம்பந்தமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் கணவன் செல்வம் என்பவர் அவரது மனைவி செல்வியை அருகா மனையால் வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கணவன் செல்வமும் அருகாமணையால் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிருக்கு போராடிய செல்வத்தை மீட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆமத்தூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி