சாலையில் ஆறாக ஓடும் கழிவு நீரால் மக்கள் அவதி

62பார்த்தது
அருப்புக்கோட்டை வேலாயுதபுரம் பகுதியில் கழிவு நீர் கால்வாய் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. ‌ இதற்காக கழிவு நீர் முழுவதும் இன்று சாலைகளில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். மதுரை பிரதான சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. சாலையில் வேகமாக செல்லும் வாகனங்களால் கழிவுநீர் நடந்து செல்வோர் மீது விழுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ‌ எனவே இதுபோன்று கழிவுநீரை சாலைகளில் திறந்து விடாமல் மாற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ‌

தொடர்புடைய செய்தி