கல்குவாரியில் மண் சரிந்து 2 பேர் பலி

4207பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த பெரும்பாக்கத்தில் ஏராளமான தனியார் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் இன்று காலை அந்த பகுதியில் உள்ள தனியார் கல்குவாரி ஒன்றில் எறையூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் மற்றும் சேலம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் ஆகிய இரண்டு தொழிலாளர்கள் கல்குவாரியில் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக அவர்கள் மீது ஏராளமான மண் சரிந்து விழுந்த நிலையில், இரண்டு பேரும் மண்ணில் புதைந்து மூச்சு திணறி சம்பவ இடத்தில் பலியானார்கள். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்தில் குவிந்த பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் உடல்களை ஆம்புலன்ஸில் ஏற்றவிடாமல் கல்குவாரியின் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரையிலும், உரிய நிவாரணம் வழங்கும் வரையிலும் உடல்களை இங்கிருந்து எடுக்க விடமாட்டோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு சென்ற மயிலம் போலீசார் பேச்சுவார்த்தையில், ஈடுபட்டு பிரேத்தை உடற்கூறு ஆய்விற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி