டெல்லியில் விவசாயிகள் போராட்டம்

64பார்த்தது
விவசாயிகள் போராட்டத்தையொட்டி டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சில்லா எல்லையிலும், டெல்லி-நொய்டா எல்லையிலும் பாதுகாப்புப் படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். அனைத்து எல்லைகளும் 24 மணி நேரத்திற்கு மூடப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதனால் டெல்லியில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக அதிகரித்துள்ளது. விரைவு அதிரடிப்படையினரும் களம் இறங்கி நிலைமையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆளில்லா விமானங்கள் மூலம் அனைத்து இடங்களிலும் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி