அரகண்டநல்லூர் அருகே 5 மாடுகள் மர்மமான முறையில் உயிரிழப்பு

55பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் அருகே உள்ளது சு. பில்ராம்பட்டு கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் ஆறுமுகம் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் தன்னுடைய ஐந்து கறவை மாடுகளை மேச்சலுக்கு அழைத்துச் சென்று, பின்னர் அங்கு ஐந்து கறவை மாடுகளுக்கும் தண்ணீர் காட்டி உள்ளார். தண்ணீர் குடித்த சில நிமிடங்களில் ஐந்து கறவை மாடுகளும் மயங்கி விழுந்து இறந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம் இந்த சம்பவம் குறித்து அப்பகுதி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பெயரில் கிராம நிர்வாக அலுவலரும் கால்நடை மருத்துவர்களும் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த 5 மாடுகளையும் ஆய்வு செய்தனர். மேலும், கால்நடை மருத்துவர் உயிரிழந்த மாடுகளை பிரேத பரிசோதனை மேற்கொண்டு இது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நேரத்தில் விவசாயி ஒருவருக்கு சுமார் 2. 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஐந்து கறவை மாடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்துதியுள்ளது.

தொடர்புடைய செய்தி