திண்டிவனம் அருகே சாலை விபத்தில் சூப்பர் சிங்கர் காயம்

2568பார்த்தது
திண்டிவனம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பின்னால் சென்ற டேங்கர் லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானதில் சின்னத்திரை பாடகி லேசான காயங்களுடன் உயிர்த் தப்பினார்.

கேரள மாநிலத்தை பூர்வீகம் கொண்டவர் அனுராதா (24). இவர் குடும்பத்துடன் மன்னார்குடியில் வசித்து வருகிறார். இவர் சின்னத்திரை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் "சூப்பர் சிங்கர்" ஆக பிரபலமடைந்தார். இந்த நிலையில் காரைக்குடியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தனது தாய் மற்றும் உதவியாளருடன் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.

காரை மன்னார்குடி பகுதியை சேர்ந்த மோகன் என்பவர் ஓடி வந்தார். கார் திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டு புதிய மேம்பாலத்திலிருந்து கீழே இறங்கி கொண்டிருந்த பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது.  

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சின்னத்திரை பாடகி அனுராதாவின் மூக்கு மற்றும் உதடு பகுதியிலும், உதவியாளர் ஆனந்தின் கையில் லேசான காயம் ஏற்பட்டது.காயமடைந்தவர்கள் மற்றொரு காரை வரவழைத்து திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின் சென்னை திரும்பி சென்றனர்.

கார் விபத்தில் சின்னத்திரை பாடகி லேசான காயங்களுடன் உயிர் தப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி