கோவில் கும்பாபிஷேக விழாவில் பெண்களிடம் செயின் பறிப்பு

63பார்த்தது
கோவில் கும்பாபிஷேக விழாவில் பெண்களிடம் செயின் பறிப்பு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த பாதிரிகிராமம் மெயின் ரோட்டில் அய்யனாரப்பன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் கும்பாபிஷேகம் 'நேற்று முன்தினம் பயன்படுத்தி நடைபெற்றது. அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஒலக்கூர் கிராமத்தை சேர்ந்த அஞ்சலாட்சி (வயது 60) என்பவர் கழுத்தில் இருந்த 3 பவுன் செயினையும், கோனேரிகுப்பம் வசந்தா கழுத்தில் அணிந்தி ருந்த 2 பவுன் செயினையும், அதே பகுதி அம்மன் கோவில் தெரு அலமேலு (65) என்பவர் கழுத்தில் இருந்த 4 பவுன் செயினையும் மர்மநபர்கள் பறித்துச்சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் ஒலக்கூர் போலீசர் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர்

தொடர்புடைய செய்தி