மரக்காணம் அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து

1894பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த அனுமந்தை குப்பம் பகுதியை சார்ந்தவர் காளியப்பன் இவரது மகன் மணிகண்டன் (28). இவர் கடலூர் தேவனாம்பேட்டையில் உள்ள அவரது அக்கா வீட்டிற்கு சென்று விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார்,

அப்பொழுது புதுச்சேரி - சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கூனிமேடு அருகே வந்து கொண்டிருந்த பொழுது சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மணிகண்டன் இருசக்கர வாகனத்துடன் வேகமாக மோதினார், இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு புதுச்சேரி கனக செட்டிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மணிகண்டனுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று (28.05.2024) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தற்போது சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி