செஞ்சி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்

81பார்த்தது
செஞ்சி கிழக்கு ஒன்றிய தி.மு.க.  செயல்வீரர்கள் கூட்டம்
தி.மு.க. பவளவிழாவை முன்னிட்டு நடைபெறும் முப்பெரும் விழாவில் விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் இருசெஞ்சி கிழக்கு ஒன்றிய தி. மு. க. , செயல்வீரர்கள் கூட்டம் செஞ்சி வள்ளி அண்ணாமலை திருமண மண்டபத்தில் நடந்தது. ஒன்றிய அவைத்தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

ஒன்றிய செயலாளர் விஜயகுமார் வரவேற்றார். ந்து 3 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளதாக அமைச்சர் பேசினார். மாவட்ட பொறுப்பாளர் சேகர் முன்னிலை வகித்தார். அமைச்சர் மஸ்தான் சிறப்புரை நிகழ்த்தினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. செந்தமிழ்ச்செல்வன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், ஒன்றிய துணை சேர்மன் ஜெயபாலன், ஒன்றிய செயலாளர் பச்சையப்பன், மாவட்ட விவசாய அணி கணேசன் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் அமைச்சர் பேசும் போது, 'பவளவிழாவையொட்டி கிளைகளில் உள்ள கட்சி கொடிக் கம்பங்கள் அனைத்தையும் புதுப்பித்து மூத்த முன்னோடிகளை கொண்டு கொடியேற்ற வேண்டும், தி. மு. க. , வினர் வீடு, கடை, அலுவலகங்களில் தி. மு. க. , கொடியேற்ற வேண்டும். சென்னையில் நடக்கும் முப்பெரும் விழாவில் விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் இருந்து 3 ஆயிரம் கலந்து கொள்ள வேண்டும்' என பேசினார்.

தொடர்புடைய செய்தி