அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

66பார்த்தது
திண்டிவனத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு ரெட்டி நல சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா நடந்தது.


விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ஆர்யாஸ் ஹோட்டலில் ஒ. பி. ஆர் அறக்கட்டளை மற்றும் விழுப்புரம் வடக்கு மாவட்ட ரெட்டி நல சங்கம் சார்பில் திண்டிவனம் வட்டத்தில் 10ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட ரெட்டி நல சங்க தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டப்பட்டனர்.


இதில் ரெட்டி நல சங்க நிர்வாகிகள் கபீர்தாஸ், வெங்கட்ராயலு, கார்த்திக், பாபு, தீனதயாளன், முத்துகிருஷ்ணன், ராம்குமார், புண்ணியமூர்த்தி, புருஷோத்தமன், ஹரி, வைத்தியநாதன், பாலசுப்பிரமணியன், தேவராஜ், ஸ்மைல் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  


இவ்விழாவில் மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி