சாலை விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலி

1049பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சேத்பட் சாலையில் மகாதேவி மங்களம் அருகே கார் - லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா தாயனூர் கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் என்பவர் சென்னையிலிருந்து புதிய காரை வாங்கிக் கொண்டு சொந்த ஊரான தாயனூர் கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தபோது ஆரணியிலிருந்து திருச்சிக்கு இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி மீது பலமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே கார் நசுங்கி கார் ஓட்டிய பூபாலன் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து வளத்தி காவல் நிலையத்திற்கு தகவல் அறிந்த வளத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கார் நசுங்கி காருக்குள் சிக்கி இருந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வளத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி