ராகுல்காந்தி யாத்திரைக்கு அனுமதி மறுப்பு

62பார்த்தது
ராகுல்காந்தி யாத்திரைக்கு அனுமதி மறுப்பு
பாதுகாப்பு காரணங்களுக்காக இம்பாலில் ராகுல் காந்தி யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்படுவதாக மணிப்பூர் அரசு விளக்கமளித்துள்ளது. இம்பாலில் இருந்து ஜனவரி 14-ம் தேதி இந்திய ஒற்றுமை நீதிக்கான பயணம் என்ற யாத்திரையை தொடங்க ராகுல் காந்தி திட்டமிட்டுள்ள நிலையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மணிப்பூரின் வேறு பகுதியில் ராகுல்காந்தி யாத்திரையை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எந்த இடம் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி