கேள்வி கேட்ட பாஜக வேட்பாளர் - உடனடி ரியாக்ஷன் கொடுத்த மக்கள்

62பார்த்தது
கேள்வி கேட்ட பாஜக வேட்பாளர் - உடனடி ரியாக்ஷன் கொடுத்த மக்கள்
வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பிள்ளையார்குப்பம், பெருமுகை பகுதிகளில் தாமரை சின்னத்தில் வாக்குகளை சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் மத்தியில் பாஜக வேட்பாளர் ஏசி சண்முகம் பேசுகையில், "பாரத பிரதமர் மோடி 10 ஆண்டுகால ஆட்சியில் ஒரு குறை கூட இல்லாமல் ஆட்சி நடத்தி வருகிறார். மூன்றாவது முறையாக பிரதமர் மோடி வெற்றி அடைய வேண்டும். ஆகவே என்னை வெற்றி பெறச் செய்தால், சாலை வசதி, நூலகம், ஏற்படுத்திக் கொடுப்பேன்.

தேர்தலுக்கு முன்பே மருத்துவ முகாம்களை நடத்தினோம் பார்த்தீர்களா என வேட்பாளர் ஏசி சண்முகம் மக்களை நோக்கி கேட்டதற்கு, ஆம் ரொம்ப பயனுள்ளதாக இருந்தது என உடனடியாக பதில் தெரிவித்தனர்.

தொடர்ந்து பேசிய ஏ சி சண்முகம், தேர்தல் முடிந்ததும் மீண்டும் மருத்துவ முகாம்கள் தொடங்கப்படும். வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்படும். ஆகவே நீங்கள் அனைவரும் எந்த சின்னத்திற்கு வாக்களிக்க போகிறீர்கள் என வேட்பாளர் கேட்டதற்கு தாமரை என்று பதில் அளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி