கோரிக்கை மனுக்களை பெட்டியில் போட்ட பொதுமக்கள்!

74பார்த்தது
கோரிக்கை மனுக்களை பெட்டியில் போட்ட பொதுமக்கள்!
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்வு கூட்டம் மற்றும் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் உள்ளிட்டவை ஜூன் மாதம் 4ந் தேதி வரை நடைபெறாது என்றும், பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் மனுக்கள் பெட்டியில் செலுத்தலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் செலுத்தி வந்தனர். வழக்கம்போல் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறும் என்று நினைத்த ஏராளமான பொதுமக்கள் நேற்று காலை வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு குறைதீர்வு கூட்டம் நடைபெறாததால் ஏமாற்றம் அடைந்தனர்.

பின்னர் அவர்கள் கோரிக்கை மனுக்களை அங்கிருந்த பெட்டியில் செலுத்தினர். சிலர் கோரிக்கை மனுவை கலெக்டரிடம் நேரில் கொடுக்க வேண்டும் என்று கூறி பெட்டியில் செலுத்தாமல் சென்றனர்.

தொடர்புடைய செய்தி