சிறைக்கைதிகளுக்கு போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு

70பார்த்தது
வேலூர் அடுத்த தொரப்பாடி பகுதியில் உள்ள வேலூர் மத்திய சிறையில் உள்ள கைதிகளை நல்வழிப்படுத்தி, போதை பழக்கத்தை ஒழித்து வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய செய்வதற்காகவும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையிலும் `சீர்திருத்தத்தின் சிறகுகள் போதை ஒழிப்பு மறுவாழ்வு’ என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது.


அதன்படி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருப்பத்தூர் மாவட்டம் அச்சமங்கலத்தை சேர்ந்த மனநல ஆலோசகர் அருணாச்சலம் (24) என்பவர் நியமிக்கப்பட்டார் இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனநல ஆலோசகர் அருணாச்சலம் வழக்கம்போல் சிறைக்கு வந்து சென்றார்.

பின்னர் வெளியே வந்த அவர், கைதிகளுக்கு நெருக்கமானவர்களிடம் சில தகவல்களை தனது செல்போன் மூலம் தெரிவித்ததாக தெரிகிறது.

இதை கண்டுபிடித்த சிறைத்துறையினர் அருணாச்சலத்தை ரகசியமாக கண்காணித்து அவரது செல்போனில் இருந்து யார் யாரிடம் அவர் பேசி வந்தார்? எனவும் ஆய்வு செய்தனர். அதில், வேலூர் சிறை கைதிகளின் உறவினர்கள் மற்றும் ரவுடிகளிடம் அவர் பேசி வந்தது தெரிந்தது.

இதுகுறித்து பாகாயம் காவல் நிலையத்தில் ஜெயிலர் அருள்குமரன் புகார் அளித்தார் புகாரின் பேரில் அருணாச்சலத்தை போலீசார் கைது செய்து செல்போனை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி