இறகு பந்து விளையாடி வாக்குகளை சேகரித்த ஏசி சண்முகம்!

81பார்த்தது
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் புதியநீதி கட்சி தலைவர் ஏ. சி. சண்முகம் தொடர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் வரலாற்று சிறப்பு மிக்க வேலூர் கோடையில் இன்று நடைபயிற்ச்சி மேற்கொண்ட வேட்பாளர் ஏ. சி. சண்முகம் அங்கு நடைபயிற்ச்சியில் இருந்த பொது மக்களிடம் தனக்காக ஆதரவு திரட்டினார்.

மேலும் கோட்டை மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்கள் மத்தியிலும் ஆதரவு திரட்டினார். அப்போது இளைஞர்கள் கேட்டுக்கொண்டதற்க்கு இனங்க சிறிது நேரம் இறகு பந்து விளையாடினார்.

தொடர்ந்து பொது மக்கள் மத்தியிலும் ஆதரவு திரட்டி சென்றார் வேட்பாளர் ஏ. சி. சண்முகம் அச்சமயம் சிலர் சால்வை அணிவித்து ஆதரவு அளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி