திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரியும், ஆலங்காயம் ஜெயவாசவி பள்ளி பங்குதாரர்களின் சாதி வன்கொடுமை செயலை கண்டித்தும் மற்றும் வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாரின் தலித் மீதான தொடர் அராஜக போக்கை கண்டித்து திருப்பத்தூர் தெற்கு மாவட்ட செயலாளர் வெற்றிகொண்டான், திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஓம்பிரகாசம் ஆகியோர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாநில துணை பொது செயலாளர் வன்னியரசு, தலைமை நிலைய செயலாளர் தகடூர், மா. தமிழ்செல்வன், வேலூர் மண்டல செயலாளர் இரா. சுபாஷ்சந்திரபோஸ் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய வன்னியரசு, வேங்கைவயல் மலம் கலந்த பிரச்சனையில் புதுக்கோட்டை மாவட்ட காவல் துறையின் விசாரணை அறிக்கையும், சிபிசிஐடி போலீசாரின் விசாரணை அறிக்கையும் ஒன்றாகவே அமைந்துள்ளது.
எனவே தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இந்த வழக்கை உடனடியாக சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார். மேலும் வேங்கைவயல் பிரச்சனைக்கு தீர்வு காணாமல் வருகிற 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை திமுக கூட்டணி சந்தித்தால் மிகப்பெரிய சரிவை சந்திக்க நேரிடும் என பேசினார்.