திருப்பத்தூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தன மரங்களை இரவு நேரத்தில் மர்ம நபர்கள் வெட்ட முயற்சி செய்துள்ளனர். அதனை அறிந்த வடமாநில இளைஞர்கள் உடனடியாக கூச்சலிட்டதால், அவர்கள் தப்பி சென்றனர்.
இதுகுறித்து காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை ஆகிய மூன்று துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு இல்லாததால், இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடந்து வரும் சூழல் அவலநிலையை ஏற்படுத்தியுள்ளது. அலுவலகத்திற்கு பாதுகாப்பு இல்லை என்றால், மக்களுக்கு எங்கே பாதுகாப்பு என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.