லட்சுமி நரசிம்மர் கோவிலில் கருட சேவை உற்சவம்!

82பார்த்தது
லட்சுமி நரசிம்மர் கோவிலில் கருட சேவை உற்சவம்!
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆனி மாத கருட சேவை உற்சவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு உற்சவ மூர்த்தியான பக்தோசிப்பெருமாள் சாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்து பல வண்ண மலர்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க மகா தீபாராதனைக நடைபெற்றது.

இதில் சோளிங்கர் மற்றும் சுற்றுப்புறத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி