பாணா வாரத்தில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது!

60பார்த்தது
பாணா வாரத்தில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது!
பாணாவரத்தை அடுத்த பள்ளகுன்னத்தூர் பகுதியில் சப்- இன்ஸ்பெக்டர் யுவராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் சோதனை செய்தபோது, கஞ்சா, பட்டாக்கத்தி வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அந்த வாலிபர், பள்ளகுன்னத்தூர், அல்லிதாங்கல் பகுதியை சேர்ந்த சஞ்சய் குமார் (வயது 20) என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து ½கிலோ கஞ்சா, பட்டாக்கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி