ஆற்காடு அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

59பார்த்தது
ஆற்காடு அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!
ஆற்காடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதி 1-ல் வசித்து வருபவர் ஜெயபிரசாந்த். சென்னையில் தனியார் கம் பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது தம்பி கிஷோர்குமார் (வயது 25), பி. காம் படித்துவிட்டு வேலையில்லாமல் வீட்டில் தனியாக இருந்து வந்தார். இதனால் அவருக்கு மனஉளைச்சல் அதிகமாக இருந்தது.

இந்த நிலையில் ஜெயபிர சாந்த் வேலையை முடித்துவிட்டு சென்னையில் இருந்து ஆற்காடு வந்தார். ஆற்காடு பேருந்து நிலையத்தில் இருந்து தன்னை அழைத்துச் செல்வதற்காக கிஷோர்குமாருக்கு போன் செய்தார். அவர் எடுக்காததால் வீட்டுக்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கிஷோர்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆற்காடு டவுன் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி