மளிகை கடையில் போதைப்பொருட்கள் விற்பனை-வாலிபர் கைது!

69பார்த்தது
மளிகை கடையில் போதைப்பொருட்கள் விற்பனை-வாலிபர் கைது!
வாலாஜாப்பேட்டை சுங்கச்சாவடி பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா, தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள மளிகை கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பதாக தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து போலீசார் அந்த கடைக்கு சென்று ஆய்வு நடத்தினர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் விற்பனை செய்தது தெரியவந்தது. கடையில் விற்பனைக்காக வைத்திருந்த ரூ. 54 ஆயிரம் மதிப்பிலான 4 மூட்டை ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் விற்ப னையில் ஈடுபட்ட வாலாஜாபேட்டை சக்தி நகரை சேர்ந்த தீபன் ராஜ் (28) என்பவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி