தாமரைச் சின்னத்தில் ஏசிஎஸ் - வேட்பாளர் தீவிர பிரச்சாரம்!

64பார்த்தது
தாமரைச் சின்னத்தில் ஏசிஎஸ் - வேட்பாளர் தீவிர பிரச்சாரம்!
வேலூர் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ. சி. சண்முகம் கே. வி. குப்பம் சுற்றுவட்டார பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பிரச்சாரத்தில் வேட்பாளர் ஏசி சண்முகம் யாருக்கு ஓட்டு போடுகிறீர்கள் என்று பொதுமக்களை நோக்கி கேள்வி எழுப்பினார். அப்போது மக்கள் தாமரை என்று பதிலளித்தனர். கடந்த முறை வேறொரு சின்னத்தில் நின்றேன் ஞாபகம் உள்ளதா என்று வேட்பாளர் ஏசி சண்முகம் கேட்க, மக்கள் இரட்டை இலை என தெரிவித்தனர். அதற்கு அதையெல்லாம் இப்போது மறந்துவிட வேண்டும்.

கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டபோது கே வி குப்பம் தொகுதியில் தான் அதிக வாக்குகளை ( 10, 000) பெற்றேன். எம்ஜிஆர் மற்றும் ஜானகி அம்மாவின் செல்ல பிள்ளையான என்னை இந்த தேர்தலில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

நான் தனிப்பட்ட முறையில் எவ்வளவு பணிகளை செய்கிறேன். வெற்றி பெற்றால் மோடி அமைச்சரவையில் என்னென்ன திட்டங்கள் உள்ளதோ அவை அனைத்தையும் இங்கு கொண்டு வருவேன், "என்று பேசினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி