போக்குவரத்து காவலருடன் வாக்குவாதம் செய்த நடத்துனர்

2624பார்த்தது
வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் மாவட்டத்தின் ஒரு முக்கிய சந்திப்பாகும். இங்கு 24 மணி நேரமும் வாகனங்கள் இயங்கிக் கொண்டு பரபரப்பாகவே இருக்கும்.
இந்த நிலையில் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் காட்பாடியில் இருந்து பாகாயம் வரை செல்லும் தனியார் பேருந்து ஒன்று சாலையில் நிறுத்தி போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்த காரணமாய் இருந்தது. இதனை கண்ட அங்கிருந்த போக்குவரத்து காவலர் உடனடியாக பேருந்து எடுக்கும்படி கூறினார்.

உடனே பேருந்தில் இருந்த நடத்துனர் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் போக்குவரத்துக் காவல்ரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பேருந்தை சாலையில் நிறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரித்த பின் அங்கிருந்து பேருந்து எடுத்துச் சென்றனர் தனியார் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்தினர் இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி