எந்திரங்கள் பழுதால் இரண்டு இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்

63பார்த்தது
காட்பாடி காந்தி நகரில் டான் போஸ்கோ மேல்நிலைப்பள்ளி உள்ளது இங்கு இரண்டு வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன இதில் உருவாக்கச்சாவடி மையத்தில் காலை 7: 00 மணிக்கு வாக்காளர்கள் வாக்களிக்க வந்திருந்தனர் அப்பொழுது திடீரென வாக்குப்பதிவு எந்திரம் பழுதானது. இதனால் வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் தவித்தனர். உடனே வாக்குப்பதிவு எந்திரத்தை சீர் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர் சுமார் 40 நிமிடத்திற்கு பிறகு வாக்குப்பதிவு எந்திரம் சரியானது. அதன் பின்னர் வாக்காளர்கள் வாக்களித்தனர். இதே போல காட்பாடி வி ஜி ராவ் நகரில் வாணி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி உள்ளது இங்குள்ள வாக்குச்சாவடி மையத்தில் காலையிலிருந்து பத்து முப்பது மணி வரை 68 பேர் வாக்களித்திருந்தனர். அதற்கடுத்து வாக்களிக்க சென்றவர் அதிக நேரம் எந்திரத்தை அழுத்தியதால் எந்திரம் பழுதானது.

தொடர்புடைய செய்தி