71ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு அரக்கோணம் கூட்டுறவு நகர வங்கி சார்பில் மணியக்கார தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமை செயல் ஆட்சியர் வெங்கடராமன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். பொது மேலாளர் ஆனந்த் வங்கி பணியாளர்கள் தனசேகர், ராஜா, பாஸ்கர், வெங்கடாசலம் கலந்து கொண்டனர். டாக்டர் மல்லிகா செல்வராஜ் தலைமையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.