வேலூர் மாங்காய் மண்டிக்கு மாம்பழங்கள் வரத்து அதிகரிப்பு!

568பார்த்தது
வேலூர் மாங்காய் மண்டிக்கு மாம்பழங்கள் வரத்து அதிகரிப்பு!
வேலூர் கொணவட்டம் பகுதியில் உள்ள மாங்காய் மண்டியில் 15-க்கும் மேற்பட்ட பழக்கடைகள் மற்றும் குடோன்கள் உள்ளன. இங்குள்ள கடைகளுக்கு ஆந்திர மாநிலம் மற்றும் கிருஷ்ணகிரி, திருத்தணி, செஞ்சி, வேலூர் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மல்கோவா, செந்தூரா, பங்கனப் பள்ளி, இமாம்பசந்த், நீலம் உள்ளிட்ட பல்வேறு வகையான மாம்பழங்கள் டன் கணக்கில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

அவை மொத்தம் மற்றும் சில்லரை விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. வேலூர் மாங்காய் மண்டிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மாம்பழங்கள் வரத்து குறைவாக இருந்த நிலையில் தற்போது வரத்து அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி