சரும பொலிவுக்கு உதவும் துளசியை இப்படி பயன்படுத்துங்க.!

81பார்த்தது
சரும பொலிவுக்கு உதவும் துளசியை இப்படி பயன்படுத்துங்க.!
துளசியில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பிகளானது, தோல் பிரச்சனைகள் மற்றும் தோல் நோய்களை குணப்படுத்தும். நான்கு துளசி இலைகள் மற்றும் நான்கு வேப்ப இலைகளை எடுத்து தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைக்கவும். அந்த நீரில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவ வேண்டும். இப்படி ஒரு வாரம் செய்து வந்தால் சருமம் பொலிவடையும். ஒரு ஸ்பூன் துளசி இலை விழுது, பாலில் ஊறவைத்த ஓட்ஸ் ஒரு ஸ்பூன், தேன் ஒரு ஸ்பூன், பிரவுன் சுகர் 2 ஸ்பூன் ஆகியவற்றைக் கலந்து முகத்தில் தடவ வேண்டும். இவ்வாறு செய்வதால் இறந்த செல்கள் குறைந்து பருக்கள், தழும்புகள் மறையும்.

தொடர்புடைய செய்தி