பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் - கமல் ஆதாங்கம்

64பார்த்தது
பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் - கமல் ஆதாங்கம்
நடிகர் கமல் நாட்டில் நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். தனது X பக்கத்தில் அவர், புதுச்சேரியில் 8 வயது சிறுமி கடத்திக் கொல்லப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டிருக்கிறாள். வெளிநாட்டுப் பெண்ணை ராஞ்சியில் ஒரு கும்பல் வன்புணர்வு செய்திருக்கிறது. மங்களூருவில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவியின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டுள்ளது. ஒருபுறம் வளர்ச்சி, வல்லரசு, நல்லாட்சி என்று பெருமை பேசிக்கொண்டிருக்கிறோம். மறுபுறம் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற, போதையின் பிடியில் சீரழிகிற, சாதி மத வெறி பிடித்தாட்டுகிற சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி